Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ஆளுநர் தூங்கி கொண்டு இருக்கிறார்: அன்புமணி ராமதாஸ்

Webdunia
புதன், 26 செப்டம்பர் 2018 (20:56 IST)
தமிழகத்தின் ஆளுனர் தூங்கி கொண்டிருப்பதாக பாமக இளைஞரணி தலைவரும் மக்களவை எம்பியுமான அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் ஆளுனர் தூங்கி கொண்டிருப்பதாகவும், இதனை தலைப்பு செய்தியாக போடவும் என்றும் பத்திரிகையாளர்களை கேட்டு கொண்டார்.

இந்த ஆட்சியில் ஊழல் நடைபெறுவது குறித்து கடந்த டிசம்பர் மாதம் ஆதாரத்துடன் நேரில் ஆளுனரை சந்தித்து புகார் கொடுத்ததாகவும், இந்த புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கின்றேன் என்று கூறிய ஆளுனர் இதுநாள் வரை ஒன்றுமே செய்யவில்லை என்றும் அன்புமணி கூறினார்.

இதுநாள் வரை ஆளுனர் மீது எந்தவித குற்றச்சாட்டும் இல்லாததால் அவர் நல்லவர் என்று தான் நம்பிக்கொண்டிருப்பதாகவும் இனிமேலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தான் ஆளுனர் மீதுதான் குற்றம் சொல்லவிருப்பதாகவும் அன்புமணி மேலும் கூறினார்.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments