Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு ஊழியர்களை ஆசை காட்டி மோசம் செய்த அரசு: ராமதாஸ்

Webdunia
புதன், 26 அக்டோபர் 2016 (15:16 IST)
அரசு ஊழியர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு இம்மாத சம்பளத்தை 28ஆம் தேதி வழங்குவதாக ஆணை பிரப்பித்து, பின்னர் வழக்கம் போல் மாதத்தின் கடைசி நாளே ஊதியம் வழங்கப்படும் என்று அதை ரத்து செய்தது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், அக்டோபர் மாத ஊதியத்தை நாளை மறுநாள் வழங்க அரசு முன்வர வேண்டும் என்று கூறினார்.


 

 
தீபாவளியை முன்னிட்டு அரசு ஊழியர்களின் கோரிக்கைப்படி அவர்களுக்கு இம்மாத சம்பளம் 28ஆம் தேதி வழங்கப்படும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதையடுத்து பின்னர் வழக்கம் போல் மாதம் இறுதில் நாளில் தான் சம்பளம் வழங்கப்படும் என்று அறிவித்தது.
 
இது குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
 
தமிழக அரசு செயல்பாடு எந்த அளவுக்கு தடுமாற்றத்தில் உள்ளது என்பதற்கு இது மிகச்சிறந்த உதாரணம். அக்டோபர் மாத ஊதியம் 28ஆம் தேதி வழங்கப்படும் என்று அறிவித்து அரசு ஆணை பிறப்பித்து, பின்னர் அதை ரத்து செய்து வழக்கம் போல் தான் சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவித்தது.
 
தமிழக அரசின் இந்த குளறுபடியால் அரசு பணியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அரசு ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான அக்டோபர் மாத ஊதியத்தை நாளை மறுநாள் வழங்க அரசு முன்வர வேண்டும் என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments