ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியீடு!

Webdunia
திங்கள், 28 மே 2018 (17:25 IST)
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்து குறித்த அறிக்கையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். 
 
கடந்த 22 அம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்கள் மேற்கொண்ட பேரணியில் கலவரம் வெடித்து 13 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னர் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு தடை வித்தித்தது. 
 
இருப்பினும், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர இணைய சேவை முடக்கப்பட்டது. மேலும், ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என தூத்துக்குடி கலெக்டர் உறுதியளித்தார்.
 
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என இன்று தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தூத்துக்குடி மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் மதிப்பளித்து ஆலையை மூட முடிவெடுக்கபப்ட்டுள்ளது. 
 
மாசுக் கட்டுப்பாட்டு வாரிய நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால் கடந்த 24 ஆம் தேதி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும், தண்ணீர் விநியோகமும் நிறுத்தப்பட்டது. பசுமைத்தீர்பாயம் மற்றும் மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் நிபந்தனைகளை ஸ்டெர்லைட் நிறைவேற்றவில்லை எனவே ஸ்டெர்லைட் ஆலை நிரந்தமாக மூடப்படும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்புமணி தான் பாமக தலைவர்.. மாம்பழம் சின்னம் முடக்கப்படலாம்: தேர்தல் ஆணையம்..!

புதுச்சேரியில் விஜய் ரோட் ஷோ!.. சொந்த ஊரில் காரியம் சாதிக்க முடியாத புஸ்ஸி ஆனந்த்..

தனி நீதிபதி தீர்ப்பு சட்டம்-ஒழுங்கைப் பாதித்தது: திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு வாதம்

புதைக்கப்பட்ட இரண்டே நாட்களில் சிறுமியின் உடல் மாயம்.. தஞ்சை அருகே பரபரப்பு..!

மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகம்.. 14 வயது மகளின் கழுத்தை பிளேடால் அறுத்த கணவர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments