Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ்.. வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்கிறது தமிழக அரசு..!

Mahendran
செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (10:26 IST)
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் தொடர்பான வழிகாட்டு நெறிமுறையை ஓரிரு நாட்களில் தமிழக அரசு வெளியிட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
மே 7 முதல் ஊட்டி, கொடைக்கானல் செல்ல  இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த நேற்று ஆட்சியர்களுக்கு  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்நிலையில் தலைமைச் செயலாளர் வழிகாட்டுதலின் கீழ், வருவாய்த்துறை மூலம் இ-பாஸ் நடைமுறைகள் வெளியிடப்பட உள்ளதாகவும், இதற்காக சுற்றுலா, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து இ-பாஸ் நடைமுறைகள் குறித்து ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இன்னும் ஒருசில நாட்களில் ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் தொடர்பான வழிகாட்டு நெறிமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
முன்னதாக ஊட்டி, கொடைக்கானல் செல்ல இனிமேல் இ பாஸ் எடுக்க வேண்டும் என  உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. மே 7 முதல் ஜூன் 30 வரை இபாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என நீலகிரி, திண்டுக்கல் ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கான தொழில்நுட்ப உதவிகளை தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தவெக மாநாடு எதிரொலி: மதுரையில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை..!

பாலியல் தொழிலுக்காக சிறுமிகளை கடத்திய வழக்கு: அமெரிக்காவில் 5 இந்தியர்கள் கைது..!

தவெக மாநாட்டில் இன்னொரு விபத்து.. 100 அடி கொடிக்கம்பம் சரிந்து விழுந்து கார் சேதம்..!

3000 இந்திய ஊழியர்கள் வேலைநீக்கம்: அமெரிக்காவின் ஆரக்கிள் நிறுவனம் அதிர்ச்சி முடிவு..!

பிரதமர், அமைச்சர்களின் பதவி பறிப்பு மசோதா.. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments