Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழக மீனவர்கள் 66 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் அறிவிப்பு

தமிழக மீனவர்கள் 66 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் அறிவிப்பு
, புதன், 1 அக்டோபர் 2014 (20:17 IST)
தமிழக மீனவர்கள் 66 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
 
ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 6 மீனவர்கள் கடந்த 9 ஆம் தேதியும், 30 மீனவர்கள் கடந்த 11 ஆம் தேதியும் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். 
 
கடந்த 2 ஆம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரும், 24 ஆம் தேதி நாகை, பூம்புகார் மீனவர்கள் 24 பேரும் சிறைபிடிக்கப்பட்டனர்.
 
இந்நிலையில், தமிழக மீனவர்கள் 66 பேரை விடுவித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், 7 படகுகள் விடுவிப்பு குறித்த வழக்கு விசாரணையை தேதி அறிவிக்காமல் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Share this Story:

Follow Webdunia tamil