Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நள்ளிரவு 12 மணிக்குள் தேர்தல் முடிவு! – தேர்தல் ஆணையம் ஆலோசனை!

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (13:57 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில் ஒரே நாளில் தேர்தல் முடிவுகளை வெளியிட திட்டமிட்டு வருவதாக தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற்று முடிந்த நிலையில் வாக்குகள் எண்ணும் பணி மே 2ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் வாக்குகள் எண்ணும் பணியை மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்துள்ள்ள தமிழக தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு “கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வாக்கு எண்ணும் பணிகளை நடத்த தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனையை மேற்கொண்டு வருகிறது. இதனால் வாக்கு எண்ணும் மேஜைகள் எண்ணிக்கை குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது. வாக்கு எண்ணும் பணியை நள்ளிரவு 12 மணிக்குள் முடித்து தேர்தல் முடிவுகளை வெளியிட திட்டமிட்டு வருகிறோம்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments