Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேட்புமனு தாக்கல் தொடங்கியது; இன்று வேட்பு மனு அளிக்கிறார் ஓபிஎஸ்!

Webdunia
வெள்ளி, 12 மார்ச் 2021 (11:28 IST)
தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது.

தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது.

அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் இன்று போடி தொகுதியில் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொளத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ள மு.க.ஸ்டாலின் மார்ச் 15ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

வேட்பு மனுக்களை ஆன்லைனில் டௌன்லோட் செய்து பூர்த்தி செய்து கட்டணம் செலுத்தி ஆன்லைவிலேயே செலுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இன்று தொடங்கி சனி, ஞாயிறு தவிர மார்ச் 19 வரை தினமும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுக்களை அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments