கொரோனா இருந்தால் பிரச்சாரத்திற்கு தடை! – உள்ளாட்சி தேர்தல் விதிமுறைகள்!

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (13:13 IST)
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை முதல் தொடங்கப்படுகிறது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் அமலுக்கு வந்துள்ளன.

இந்நிலையில், தேர்தலில் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கொரோனா அறிகுறிகள், பாதிப்பு தெரிய வந்தால் அவர்கள் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது. மேலும் மதுரை, திருச்சி, சென்னை போன்ற மாநகராட்சிகளில் ஒரு வாக்குச்சாவடிக்கு 1400 வாக்காளர்கள் என்ற வீதத்தில் வாக்குச்சாவடிகளை அமைக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுகவுக்கும் - திமுகவும் இடையே தான் போட்டி.. 3வது கட்சியை ஊடகங்கள் தான் பெரிதுபடுத்துகின்றன: ஈபிஎஸ்

தமிழகத்தில் இன்று முதல் மூன்று புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை.. பிரதமர் தொடங்கி வைப்பு..!

புதுடெல்லி செல்கிறேன்; எனக்காக அல்ல.. காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் x தளத்தில் பதிவு

பாஜகவில் எந்த கொம்பனா இருந்தாலும் வாங்க!.. சவால் விட்ட ஆ.ராசா!...

வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் விஜய்!.. வேகமெடுக்கும் தவெக தேர்தல் பணி...

அடுத்த கட்டுரையில்
Show comments