Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல்படையினர் தயார் நிலையில் இருக்க டிஐஜி உத்தரவு

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (15:47 IST)
தமிழகம் முழுவதும் உள்ள சிறப்பு காவல்படையினர் இன்று மற்றும் நாளை தயார் நிலையில் இருக்குமாறு டிஐஜி ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


 

 
தமிழகத்தில் உள்ள 21 மாவட்டங்களில் சிறப்பு காவல்படையினரை இன்று மற்றும் நாளை தயார் நிலையில் இருக்குமாறு டிஐஜி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். எந்தவொரு அசாதாரண சூழலையும் சமாளிக்க தயாராக இருக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்த மாநகர காவல் ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
 
இந்த சுற்றறிக்கை நேற்றே அனுப்பப்பட்ட நிலையில் இன்றுதான் தெரியவந்துள்ளது. மேலும் இதற்காக காரணம் எதுவும் வெளியாகவில்லை, ரகசியமாக வைப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த செய்தி ஊடகங்களில் வெளியாக தற்போது காவல்துறையினர் சார்பில் இந்த நடவடிக்கைக்கான காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பண்டிகை காலத்தை முன்னிட்டு தொடர் விடுமுறை வருவதால் சிறப்பு காவல்படையினர் தயார் நிலையில் இருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் மேலும் இது வழக்காமான நடவடிக்கைதான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இடையே ஹெலிகாப்டர் சேவை: டிட்கோ நிர்வாக இயக்குனர் தகவல்..!

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்.. என்ன காரணம்?

விமானம் கிளம்பும் நேரத்தில் திடீரென வெடிகுண்டு மிரட்டல்.. அவசர அவசரமாக இறங்கிய பயணிகள்..!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் வெயில் அதிகரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன்: மம்தா பானர்ஜி திட்டவட்டம்

அடுத்த கட்டுரையில்
Show comments