Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசின் இந்த மசோதாவை எதிர்க்க வேண்டும்: 9 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!

Webdunia
செவ்வாய், 22 ஜூன் 2021 (14:06 IST)
மத்திய அரசின் துறைமுக வரைவு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என ஒன்பது மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சமீபத்தில் மத்திய அரசு துறைமுக வரைவு மசோதாவை அறிமுகம் செய்தது. இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என ஒன்பது கடலோர மாநிலங்களில் முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மாநிலங்களின் உரிமையை பறிக்கும் மத்திய அரசின் இந்த மசோதாவை அனைத்து முதலமைச்சர்களும் சேர்ந்து எதிர்க்க வேண்டும் என்றும் குறிப்பாக கடலோர மாநிலங்களின் முதலமைச்சர்கள் கடுமையாக எதிர்ப்புத் அளிக்க வேண்டும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்
 
இந்த கடிதத்தை அடுத்து இந்த மசோதாவுக்கு பல மாநிலங்களில் இருந்து எதிர்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் துறைமுக வரைவு மசோதா தனியாருக்கு பெரும் லாபத்தை கொடுக்கும் மசோதா என்றும் ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வசதி படைத்த குடும்ப பெண்களை காதல் வலையில் வீழ்த்தி மோசடி! - தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்து சிக்கிய கோவை வாலிபர்

வேலைக்கு ஆள் எடுக்கும் HRஐயே பணிநீக்கம் செய்த IBM.. இனி எல்லாமே AI தான்..!

பொறுமை கடலினும் பெரிது: ராஜ்ய சபா எம்பி சீட் குறித்து பிரேமலதா கருத்து..!

500 ரூபாய் நோட்டை திரும்ப பெற வேண்டும்: அப்ப தான் கறுப்பு பணம் அழியும்: சந்திரபாபு நாயுடு..!

வகுப்புக்கு செல்லவில்லை என்றால் விசா ரத்து: இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments