Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அலங்காநல்லூர் செல்லவில்லை, சென்னை திரும்பும் ஓபிஎஸ்?

Webdunia
ஞாயிறு, 22 ஜனவரி 2017 (10:04 IST)
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு இன்று நடைப்பெற வாய்ப்பில்லாத காரணத்தினால் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் இருந்து சென்னை திரும்ப வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து இன்று காலை அலங்காநல்லூரில் ஜல்லிக்காடு நடைப்பெறும் என தமிழக அரசு சார்பில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இன்று நடைப்பெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்க நேற்று இரவே மதுரைக்கு ஓ.பன்னீர்செல்வம் சென்றுவிட்டார்.
 
இதனிடையே ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அவசர சட்டம் வேண்டாம் என்றும், நிரந்தர சட்டம் வேண்டும் என்றும் இளைஞர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதனால் வாடிவாசலில் பொதுமக்கள் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிக்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
தற்போது ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் என்றும், ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடக்க வாய்ப்பில்லாத காரணத்தினால் அவர் மதுரையில் இருந்து சென்னைக்கு திரும்புவார் என எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

டீசல் பரோட்டாவா? என்ன கருமம் இது!? – வைரலான வீடியோ! மன்னிப்பு கேட்ட யூட்யூபர்!

ஜம்முவில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி..! நான்கு பேர் சுட்டு கொலை..!!

மனிதன் உணர்ந்து கொள்ள இது உண்மையான தேர்தல் அல்ல..!அதையும் தாண்டி கொடூரமானது.! நடிகர் மன்சூர் அலிகான்..!!

மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்: எச்சரிக்கை அறிக்கை..!

கையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சிறுமிக்கு நாக்கில் அறுவை சிகிச்சை.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments