Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதியம் முதல்வர் செய்தியாளர்கள் சந்திப்பு! – வன்னியர்கள் இட ஒதுக்கீடு அறிவிப்பா?

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (13:47 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் மதியம் முதல்வர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் இன்று மாலை தமிழகத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்பதால் புதிய திட்டங்களை அறிவிக்க முடியாது. இந்நிலையில் முன்னதாக இன்று நடந்த சட்டமன்ற கூட்டத்தில் குழுக்கடன் ரத்து உள்ளிட்டவற்றை முதல்வர் அறிவித்தார். இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் பேச உள்ளார்.

இதனால் முக்கியமான வேறு சில திட்டங்கள் அல்லது நீண்ட கால பாமகவின் கோரிக்கையான வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments