Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதியம் முதல்வர் செய்தியாளர்கள் சந்திப்பு! – வன்னியர்கள் இட ஒதுக்கீடு அறிவிப்பா?

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (13:47 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் மதியம் முதல்வர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் இன்று மாலை தமிழகத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்பதால் புதிய திட்டங்களை அறிவிக்க முடியாது. இந்நிலையில் முன்னதாக இன்று நடந்த சட்டமன்ற கூட்டத்தில் குழுக்கடன் ரத்து உள்ளிட்டவற்றை முதல்வர் அறிவித்தார். இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் பேச உள்ளார்.

இதனால் முக்கியமான வேறு சில திட்டங்கள் அல்லது நீண்ட கால பாமகவின் கோரிக்கையான வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments