Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்திற்கு 422 புதிய பேருந்துகள்: ஜெயலலிதா கொடி அசைத்து துவக்கி வைத்தார்

தமிழகத்திற்கு 422 புதிய பேருந்துகள்: ஜெயலலிதா கொடி அசைத்து துவக்கி வைத்தார்
, திங்கள், 12 அக்டோபர் 2015 (22:56 IST)
தமிழகத்திற்கு 422 புதிய பேருந்துகளையும், 18 மினி பேருந்துகளையும் முதல்வர் ஜெயலலிதா கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
 

 
இது குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:–
 
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் 100.18 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 422 புதிய பேருந்துகள் மற்றும் 18 சிற்றுந்துகளை, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
 
பொது மக்களின் போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில்,  புதிய பேருந்து சேவைகளை துவக்கி வைத்துள்ளதாகவும், புதிய வழித்தடங்களை அறிமுகப்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை முனைப்புடன் இந்த அரசு செயல்படுத்தி வருவதாகவும் அரசு சார்பில் தெரிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் தங்கமணி மற்றும் போக்குவரத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil