Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக்கபூர்வமான ஆலோசனை சொன்னால் கேட்போம்: துரைமுருகனுக்கு முதல்வர் பதிலடி!

Webdunia
திங்கள், 30 நவம்பர் 2020 (18:00 IST)
அரசு மீது பழி சுமத்துவதை விட்டுவிட்டு ஆக்கபூர்வமான ஆலோசனை கூறினால் கண்டிப்பாக கேட்போம் என துரைமுருகனுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பதிலடி கொடுத்துள்ளார் 
 
செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ள ஷட்டர் பழுதடைந்தது என்றும் அதனால் நீர் கசிந்து வீணாகி வருவதாகவும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் குற்றம் சாட்டி இருந்தார். ஆனால் இதனை மறுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெள்ளம் ஏற்பட்டது காரணமாக ஷட்டரில் கோளாறு ஏற்பட்டாலும் அது உடனே சரி செய்யப்பட்டது என்றும் தற்போது தேங்கி இருக்கும் நீர் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதாகவும் துரைமுருகன் அவர்கள் வேண்டுமென்றே அரசு மீது பழியை போடுவதாகவும் கூறினார் 
 
மக்கள் பிரச்சினைகளை திசை திருப்பாமல் ஆக்கபூர்வமான ஆலோசனை கூறினால் நாங்கள் கேட்டுக் கொள்வோம் என்றும் அதை விடுத்து பழுத்த அரசியல்வாதியான துரைமுருகன் அவர்கள் அரசின் மீது வேண்டுமென்றே பழி சுமத்துவது நல்லதல்ல என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments