Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓ.. நீங்க சரக்குல திருக்குறளா அச்சிட்டு வித்தீங்க? – சட்டசபையில் காரசார விவாதம்!

Webdunia
வெள்ளி, 13 மார்ச் 2020 (13:50 IST)
தமிழகத்தில் மது விற்பனை குறித்து தமிழக சட்டசபையில் எழுந்த கேள்வி வாக்குவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டசபையின் இரண்டாவது பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழகத்தில் மது விற்பனை அதிகரித்துள்ளது குறித்த விவாதம் எழுந்தது.

கடந்த ஆண்டுகளில் மது விற்பனை அதிகரித்துள்ளது உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு பேசிய திமுக எம்.எல்.ஏ “மது நாட்டிற்கும் வீட்டிற்கும் உயிருக்கும் கேடு என மது பாட்டில்களில் அச்சடித்துவிட்டு அதை அரசே விற்பனை செய்கிறது என்று குற்றம்சாட்டினார்.

அவரது குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் தங்கமணி ”2006 – 2011 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் இருந்தபோதும் மது விற்பனை இருந்தது. அப்போது மதுப்பாட்டில்களில் திருக்குறளையா அச்சிட்டு விற்பனை செய்தீர்கள்?” என்று கேள்வியெழுப்பினார். இதனால் சிறிதுநேரம் சட்டசபை பரபரப்பாக காணப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments