Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டணி குறித்து அதிரடி முடிவு எடுத்த ஜி.கே.வாசன்!

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (12:43 IST)
தமிழகத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனித்து எதிர்கொள்ளும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
 

 
இது தொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில், "நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நிலவிய சூழ்நிலை காரணமாக ஒரு நல்ல நாகரிகமான, மக்கள் நலன் சார்ந்த மாற்று அரசியலை தமிழகத்தில் நிறுவ வேண்டும் என்பதற்காக ஒரு நல்ல கூட்டணியை அமைத்து தேர்தலை சந்தித்தோம்.
 
அதற்கு ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு இருந்த போதிலும், தமாகா லட்சியங்களை மக்கள் மனதில் பதியவைக்க போதிய கால அவகாசம் இல்லாத காரணத்தால் வெற்றிவாய்ப்பு கிடைக்கவில்லை.
 
உள்ளாட்சித் தேர்தல் களத்தை தனித்தே சந்திக்க வேண்டும் என்பதற்காக கடந்த மூன்று மாதங்களாக கடின உழைப்பை மேற்கொண்டோம். அதன் அடிப்படையில் தற்போது தனித்தே தேர்தலை சந்திக்கக் கூடிய ஒரு நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வருக்கு பக்தி இல்லை.. அதனால் முருகர் மாநாடு நடத்துகிறோம்: நயினார் நாகேந்திரன்

பணமா குடுங்க.. ஜிபே பண்ணிடுறோம்! 112 பேருக்கு விபூதி அடித்த மோசடி தம்பதி சிக்கியது எப்படி?

ஒரே ஆண்டில் மூன்று மடங்கு.. இந்தியர்களின் ஸ்விஸ் வங்கி சேமிப்பு அதிகரிப்பு!

பங்குச்சந்தை உயர்ந்தாலும் நம்பிக்கையில்லாத முதலீட்டாளர்கள்.. மதியத்திற்கு மேல் என்ன நடக்குமோ?

ஆதார் இனி உங்கள் கைக்குள்! ஜெராக்ஸ் எடுக்க வேண்டிய அவசியமில்லை.. UIDAI இன் புதிய செயலி

அடுத்த கட்டுரையில்
Show comments