Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரேமலதா என்ன வருவாய்த்துறை அதிகாரியா? – சீறிய டி.கே.எஸ் இளங்கோவன்

Webdunia
திங்கள், 30 செப்டம்பர் 2019 (17:51 IST)
கம்யூனிஸ்ட் கட்சிக்கு நிதியளித்தது குறித்து திமுக விளக்கமளிக்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன்.

தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசும்போது திமுக கட்சி தேர்தலின் போது கம்யூனிஸ்ட் கட்சிக்கு தேர்தல் நிதியாக 25 கோடி கொடுத்ததாகவும், அதற்கு சரியான விளக்கம் அளிக்க வேண்டுமென்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த திமுக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன் “திமுக எதற்காக பிரேமலதாவிற்கு விளக்கம் அளிக்க வேண்டும்? அவர் என்ன வருமானவரித்துறை அதிகாரியா?  நாங்கள் செய்த செலவுகள் குறித்த அறிக்கைகளை முறையாக தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளோம்.” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments