மாவட்ட வாரியாக பிளஸ்டூ தேர்ச்சி சதவீத விகிதத்தை அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ளது. அதில் திரூப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள பிளஸ்டு மாணவர்களுக்கு மார்ச் 1 ஆம் தேதி பொதுத் தேர்வுகள் நடந்தன. மொத்தமாக 8 ,87,992 பேர் தேர்வு எழுதினர். தேர்வுத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 30 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 11 ஆம் தேதி நிறைவுபெற்றன. இதையடுத்து இன்று தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு முடிவுகளில் மொத்தமாக 91.03 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் 88.57 சதவீதமும் மாணவிகள் 93.64 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளன. மாணவர்களை விட மாணவிகள் 5 சதவீதம் அதிகளவில் தேர்ச்சியடைந்துள்ளன.
இந்நிலையில் மாவட்ட வாரியாக தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் திருப்பூர் மாவட்டம் 95.37 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. காரைக்கால் மாவட்டம் 84.87 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது.