Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகள்: தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Webdunia
திங்கள், 2 மார்ச் 2020 (16:28 IST)
திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகள்
திருவொற்றியூரை சேர்ந்த திமுக எம்எல்ஏ கேபிபி சாமி மற்றும் குடியாத்தம் தொகுதியைச் சேர்ந்த திமுக எம்எல்ஏ காத்தவராயன் ஆகிய இருவரும் சமீபத்தில் உடல்நலக் கோளாறு காரணமாக அடுத்தடுத்த நாட்களில் காலமானார்கள் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் இரண்டு தொகுதிகளில் எம்எல்ஏக்கள் காலமானதை அடுத்து இந்த இரண்டு தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் ஆகிய இரண்டு சட்டசபை தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலகம் கடிதம் எழுதி உள்ளது. இதனை அடுத்து இரண்டு தொகுதிகளும் காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது 
 
மேலும் அடுத்த ஆண்டு மே 25ஆம் தேதி வரை தற்போதைய அரசின் ஆட்சிக்காலம் இருப்பதால் இந்த இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது. ஒரு சட்டசபை தொகுதி காலியானால் 6 மாதத்திற்குள் அந்த தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படவேண்டும் என்ற விதி இருப்பதை அடுத்து விரைவில் இந்த இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் குறித்து அறிவிப்பை தேர்தல் கமிஷன் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் திமுக எம்எல்ஏக்கள் வெற்றிபெற்ற நிலையில் அந்த தொகுதிகளை திமுக தக்கவைத்துக்கொள்ளுமா? அல்லது அதிமுகவிடம் பறி கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments