Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதி சான்றிதழ் இல்லாததால் கல்லூரியில் சேர முடியவில்லை: மனவிரக்தியில் மாணவி தற்கொலை..!

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2023 (14:16 IST)
சாதி சான்றிதழ் இல்லாததால் கல்லூரியில் சேர முடியவில்லை என்ற மனவிரக்தியில் இருந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவண்ணாமலையில் அருகே நடந்து உள்ளது. 
 
திருவண்ணாமலையில் அருகே ராஜேஸ்வரி என்ற மாணவி பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று அரசு கலைக்கல்லூரியில் படிக்க விண்ணப்பம் செய்திருந்தார். 
 
இந்த நிலையில் கல்லூரியில் சேர்வதற்கு சாதி சான்றிதழ் கட்டாயம் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில் அவரிடம் சாதி சான்றிதழ் இல்லை என்று கூறப்படுகிறது. 
 
இதனால் கல்லூரியில் சேர முடியாமல் மன விரக்தியில் இருந்த ராஜேஸ்வரி திடீரென பூச்சி மருந்து குறித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதனை அடுத்து இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 
 
மறைந்த மாணவியின் ஜாதி பன்னியாண்டி என்றும் அந்த ஜாதி இதுவரை திருவண்ணாமலை மாவட்டத்தில் பதிவு செய்யவில்லை என்பதால் அவருக்கு ஜாதி சான்றிதழ் கிடைத்ததில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments