திருவண்ணாமலை மண் சரிவு! தலா ரூ.5 லட்சம் நிவாரணம்! - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Prasanth Karthick
செவ்வாய், 3 டிசம்பர் 2024 (09:05 IST)

திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியான குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை அறிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

 

 

ஃபெஞ்சல் புயல் பாண்டிச்சேரி அருகே கரையை கடந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. திருவண்ணாமலையில் பெய்த கனமழையால் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சில வீடுகள் மண்ணில் புதைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளித்தது. தொடர்ந்து இரண்டு நாட்களாக மீட்பு பணிகள் தீவிரமாக நடந்த நிலையில் வீட்டில் சிக்கிய 7 பேரை சடலமாகவே மீட்க முடிந்தது.

 

இந்த சம்பவம் தமிழக அளவில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், துரிதமாக மீட்பு பணிகள் மேற்கொண்டபோதும் உயிருடன் அவர்களை மீட்க முடியாதது துரதிர்ஷ்டவசமானது என வருத்தம் தெரிவித்துள்ளார்.

 

மேலும் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணமாக முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோடையன் ஊரில் மீட்டிங்!.. நம்ம கோட்டைன்னு காட்டணும்!.. நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட பழனிச்சாமி!...

டிட்வா புயல்: சென்னை மாநகராட்சியின் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?

மனைவியை கொலை செய்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவன்!.. கோவையில் அதிர்ச்சி!....

ஒரு கிலோ மல்லிகைப்பூ 4000 ரூபாய்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

ஆபத்தை உணராமல் மெரினாவில் குறைந்த பொதுமக்கள்.. போலீசார் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments