Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவண்ணாமலை மண் சரிவு! தலா ரூ.5 லட்சம் நிவாரணம்! - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Prasanth Karthick
செவ்வாய், 3 டிசம்பர் 2024 (09:05 IST)

திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியான குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை அறிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

 

 

ஃபெஞ்சல் புயல் பாண்டிச்சேரி அருகே கரையை கடந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. திருவண்ணாமலையில் பெய்த கனமழையால் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சில வீடுகள் மண்ணில் புதைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளித்தது. தொடர்ந்து இரண்டு நாட்களாக மீட்பு பணிகள் தீவிரமாக நடந்த நிலையில் வீட்டில் சிக்கிய 7 பேரை சடலமாகவே மீட்க முடிந்தது.

 

இந்த சம்பவம் தமிழக அளவில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், துரிதமாக மீட்பு பணிகள் மேற்கொண்டபோதும் உயிருடன் அவர்களை மீட்க முடியாதது துரதிர்ஷ்டவசமானது என வருத்தம் தெரிவித்துள்ளார்.

 

மேலும் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணமாக முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments