Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பில் மிதந்த ஈ.. ‘எடுத்து போட்டுட்டு குடிங்க’; சப்ளையர் அலட்சியம்!

Webdunia
புதன், 21 செப்டம்பர் 2022 (09:27 IST)
திருவண்ணாமலையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் சூப்பில் ஈ இறந்து மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்

திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் பகுதியில் பிரபலமான சைவ உணவகத்தின் கிளை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இந்த ஹோட்டலில் சாப்பிட மருத்துவர் ஒருவர் அவரது நண்பர்களோடு சென்றுள்ளார்.

உணவுக்கு முன்னதாக அவருக்கு அளிக்கப்பட்ட சூப்பில் ஈ ஒன்று இறந்து மிதந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து சப்ளையரிடம் புகார் தெரிவித்திருக்கிறார். ஆனால் சப்ளையரோ அலட்சியமாக, எடுத்து போட்டுவிட்டு சாப்பிடுமாறு கூறியுள்ளார். இதனால் மருத்துவரும் அவரது நண்பர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் அந்த சூப்பை படம் பிடித்துக் கொண்டு பில்லையும் கொடுத்துவிட்டு புகார் செய்ய போவதாக சொல்லிவிட்டு அவர் சென்றுள்ளார். சமீபத்தில் திருவண்ணாமலையில் உள்ள உணவகம் ஒன்றில் பீட்ரூட் பொறியலில் எலி தலை இருந்ததாக வெளியான புகார் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

பிஎஃப் பணத்தை இனி ஏடிஎம்-இல் எடுக்கலாம்.. மத்திய தொழிலாளர் துறை அறிவிப்பு..!

அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு உத்தரவு..!

ரூல்ஸ் போட்டவர்களை ரூ. போட்டு ஓடவிட்டவர் முதல்வர்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments