Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவி 8 மாத கர்ப்பம்; காரணமான தந்தை கைது! – திருவண்ணாமலையில் அதிர்ச்சி!

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (10:34 IST)
திருவண்ணாமலை அருகே பெற்ற மகளை தந்தையே கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை அருகே உள்ள ஆரணியை சேர்ந்தவர் கன்னியப்பன். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் மாணவி உடல்நலமின்றி இருப்பதை அறிந்த பள்ளி நிர்வாகத்தினர் அவரை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்ததில் மாணவி 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

அதை தொடர்ந்து இதுகுறித்து மாணவியிடம் விசாரித்ததில் மாணவியின் தந்தையே அவரிடம் தவறாக நடந்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் கன்னியப்பனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

திடீரென சாலையின் நடுவில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்.. வாகனங்கள் சேதம்..!

அன்புமணியை சந்திக்க மாட்டேன்: சென்னை வந்த டாக்டர் ராமதாஸ் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments