Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற முன்னாள் எம்எல்ஏவின் மகன்

ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற முன்னாள் எம்எல்ஏவின் மகன்
, சனி, 27 செப்டம்பர் 2014 (08:04 IST)
திருவள்ளூர் அருகே ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட முன்னாள் எம்எல்ஏவின் மகனை காவல் துறையினர் விரட்டிப் பிடித்தனர்.
 
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் அருகே உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் யூனியன் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது.
 
அதிகாலை இந்த மையத்துக்குள் உள்ள இயந்திரத்தை மர்ம நபர் ஒருவர் சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு உடைக்க முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
 
அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற காவல் துறையிரைக் கண்ட அந்த மர்ம நபர் தப்பி ஓடினார். இதையடுத்து காவல் துறையினர் துரத்திச் சென்று அந்த மர்ம நபரைப் பிடித்தனர். பிறகு அவரை, மணவாளநகர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
 
அதில் அந்த நபர் மணவாளநகர், கபிலர் நகரைச் சேர்ந்த நடராஜனின் மகன் 47 வயதுடைய மகேந்திரன் என்பது தெரியவந்ததது. இதையடுத்து மகேந்திரனை காவல் துறையினர் கைது செய்தனர்.
 
மகேந்திரனின் தந்தை நடராஜன் கடந்த 1989 ஆம் ஆண்டு, திமுக சார்பில் திருத்தணி தொகுதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil