Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் மூன்று நாட்களுக்கு தரிசனத்திற்கு தடை! – திருச்செந்தூர் கோவில் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (08:41 IST)
தமிழகத்தில் பிரபலமான அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் மூன்று நாட்களுக்கு தரிசனத்திற்கு தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக பல காலமாக கோவில்கள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது திறக்கப்பட்டுள்ளன. அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் கோவில் திறக்கப்பட்ட நிலையில் முதலில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் தரிசன நேரம் அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் வார இறுதிகளில் வழிபாட்டு தளங்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது. அதனால் இன்று முதல் ஞாயிற்றுகிழமை வரை மூன்று நாட்களுக்கு கோவிலில் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

பேச்சுவார்த்தை இல்லை.. அமெரிக்க பொருட்களுக்கு 125% வரி.. சீனா அதிரடி..!

கே.என்.நேரு சகோதரர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. திடீர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதி..!

பாஜக தலைவர் இவர் தானா? எதிர்த்து யாரும் போட்டி இல்லை.. அண்ணாமலை என்ன ஆவார்?

எடப்பாடி சிங்கக்குட்டி.. ஜெயலலிதா 8 அடி பாய்ந்தால், அவர் 16 அடி பாய்வார்: செல்லூர் ராஜூ

அடுத்த கட்டுரையில்
Show comments