Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசன நேரம் குறைப்பு: பக்தர்கள் அதிருப்தி!

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (08:15 IST)
திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசன நேரம் குறைக்கப்பட்டதை அடுத்து பக்தர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே. குறிப்பாக வழிபாட்டு தலங்கள் வெள்ளி முதல் ஞாயிறுவரை மூடப்பட்டிருக்கும் என்றும் திறந்திருக்கும் நேரங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் இதுவரை அதிகாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர் 
 
இந்த நிலையில் தற்போது அதிகாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் திருச்செந்தூர் முருகன் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காணாமல் போன ‘அன்னாபெல்’ பேய் பொம்மை.. அடுத்தடுத்து நடக்கும் துர் சம்பவங்கள்! - பீதியில் உறைந்த மக்கள்!

ரெய்டுகளுக்கு பயந்து கட்சியை அடமானம் வைத்த ஈபிஎஸ்! முதல்வர் முக ஸ்டாலின்

இடியை கண்டாலும் பயம் இல்லை என்று கூறியவர் வெளிநாடு தப்பிச்சென்றது ஏன்? ஈபிஎஸ் கேள்வி

பாகிஸ்தானை ஓட ஓட விரட்டிய ராக்கெட் லாஞ்சர்கள்.. இந்தியாவிடம் ஆர்டர் கொடுத்த இஸ்ரேல்..!

கனமழை எச்சரிக்கை: சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை! - வனத்துறை உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments