திங்கள் வரை டைம்.. அதுக்குள்ள கெளம்பிடணும்..! – வெளிமாநில ஆம்னி பேருந்துகளுக்கு காலக்கெடு!

Prasanth Karthick
வியாழன், 13 ஜூன் 2024 (18:51 IST)
தமிழ்நாட்டில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் செயல்பட்டு வரும் நிலையில் அவை வெளியேற கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.



தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு செல்ல தமிழக அரசு போக்குவரத்தின் வாகனங்களை தவிர்த்து, பல தனியார் ஆம்னி பேருந்துகளும் செயல்பட்டு வருகின்றன. இதில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் பலவும் தமிழ்நாட்டிற்குள் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 547 ஆம்னி பேருந்துகள் வெளிமாநில பதிவெண்ணுடன் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்ட நிலையில் அவை தமிழ்நாட்டிற்குள் இயக்க அனுமதி இல்லை என வெளியேற போக்குவரத்து துறை உத்தரவிட்டது.

நாளை முதல் தமிழ்நாட்டில் வெளிமாநில ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட கூடாது என கூறப்பட்டிருந்த நிலையில், ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்றி ஜூன் 17ம் தேதி வரை இயக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. திங்கள் கிழமைக்கு மேல் வெளிமாநில ஆம்னி பேருந்துகள் தமிழகத்திற்குள் இயக்கப்பட்டால் சிறை பிடிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments