Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொலை முயற்சி செய்த கொடுவிலார்பட்டி சுகந்தி: பரபரப்பு தகவல்

Webdunia
வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (08:14 IST)
தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி என்ற பகுதியை சேர்ந்த சுகந்தி என்பவர் அந்த ஊரையே கெடுக்கும் வகையில் ஆபாசமான டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டு வந்ததால் ஊரை விட்டு விரட்டப்பட்டார் என்பது தெரிந்ததே
 
சுகந்தி ஊரைவிட்டு விரட்டப்படுவதற்கு டிக்டாக்கில் உள்ள இரண்டு நபர்கள் தான் காரணம் என்பதும், ஆரம்பத்தில் சுகந்திக்கு நண்பர்களாக இருந்த இவர்கள் பின்னர் அவருக்கு எதிரிகளாக மாறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் தன்னை ஊரை விட்டு விரட்ட காரணமாக இருந்த இரண்டு இளைஞர்களுக்கும் சுகந்திக்கும் இடையே மோதல் அதிகரித்து வந்ததாகவும், இதனை அடுத்து தனது புதிய ஆண் நண்பர்களுடன் இணைந்து கூலிப்படை மூலம் அவர்கள் இருவரையும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் டிக்டாக்கில் வெளியான ஆடியோ உரையாடல் ஒன்றின்மூலம் வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது 
 
இரண்டு இளைஞர்களை டிக்டாக்கில் திட்டம் போட்டு கொலை செய்ய முயற்சித்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொழுதுபோக்கு என்பதையும் மீறி தற்போது ஆபாசம் மற்றும் குற்றச்செயல்களுக்கும் காரணமாக இருப்பதால் டிக்டாக் செயலியை இந்தியா முழுவதும் தடை செய்ய வேண்டும் என்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்