Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொடைக்கானலில் பலத்த இடியுடன் பெய்த கனமழை

கொடைக்கானலில் பலத்த இடியுடன் பெய்த கனமழை
, சனி, 7 மே 2016 (17:36 IST)
கொடைக்கானலில் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது, இதனால் கோடை வெயிலால் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


 
 
தமிழகமெங்கும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடந்த சில மாதங்களாக கொடைக்கானல் பகுதியிலும் வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. இருப்பினும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் வருகை குறையவில்லை.
 
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் கடந்த இரண்டு மாதங்களாக கொடைக்கானல் பகுதியில் ஏற்பட்ட குடிநீர் பிரச்சனை, இனி இருக்காது என்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 
கோடை காலத்தில் இயல்பாகவே சுற்றுலா பயணிகளின் கூட்டம் கொடைக்கானலில் அதிகமாக குவியும், மேலும் தற்போது மழை பெய்துள்ளதால் கட்டாயம் அதிக அளவில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூன்றாவது அணி இல்லை இது கருணாநிதி; திமுக தான் மூன்றாவது அணி இது வைகோ!