Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் இளம் பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த மூன்று பேர் கைது

சென்னையில் இளம் பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த மூன்று பேர் கைது
, வியாழன், 28 மே 2015 (23:04 IST)
சென்னையில்,இளம் பெண்னுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
சென்னை, கூடுவாஞ்சேரி காந்தி நகரை சேர்ந்தவர் அம்மு (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) இவர் கூடுவாஞ்சேரி காவல்நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது:– 
 
நான், சென்னை, கூடுவாஞ்சேரி காந்தி நகரில் வசித்து வருகின்றேன். எனக்கு திருமணமாகி 8 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. நான் எனது குடும்ப வாழ்க்கைக்காக, கூடுவாஞ்சேரி அருகே உள்ள ஒரு தனியார் கம்பெனியில் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றேன்.
 
அதே கம்பெனியில், என்னுடன் பணியாற்றி வரும் மோகன், இளங்கோவன் மற்றும் அவரது நண்பர் வெங்கட் ஆகிய 3 பேரும் என்னை அடிக்கடி கிண்டல் செய்துவருகின்றனர். எனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்துவருகின்றனர்
 
மேலும், எனது செல்போனில் ஆபாசமாக பேசுவதும், ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்புவதும் என தொல்லை கொடுத்த வண்ணம் உள்ளனர். எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியிருந்தார். 
 
இந்த புகார் மீது விசாரணை நடத்திய காவல்துறையினர், அம்மு கொடுத்த புகார் உண்மை என கண்டறிந்தனர்.  விசாரணை இறுதியில், ஊரப்பாக்கத்தை சேர்ந்த மோகன், சீனிவாசபுரத்தை சேர்ந்த இளங்கோ, வெங்கட் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil