Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முன்னாள் அமைச்சரிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த பெண்

முன்னாள் அமைச்சரிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த பெண்
, செவ்வாய், 20 செப்டம்பர் 2016 (22:48 IST)
திமுக முன்னாள் அமைச்சர் வி.எம்.சி.சிவக்குமாருக்கு பெண் ஒருவர் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


 

காரைக்கால் திருபட்டினத்தை சேர்ந்தவர் வி.எம்.சி.சிவக்குமார். திமுக முன்னாள் அமைச்சரான இவர், தற்போது அவர் அதிமுகவில் இணைந்துள்ளார்.
 
இந்நிலையில், இவரது செல்போனுக்கு பெண் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது தனது கணவரின் சொத்துக்களை சிவக்குமார் வைத்துள்ளதாகவும், அதனால், தனக்கு மாதந்தோறும் பணம் தர வேண்டும் என்றும் இல்லாவிட்டால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறி மிரட்டல் விடுத்துள்ளார்.
 
மிரட்டல் விடுத்தது காரைக்காலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாராய வியாபாரம் செய்து வந்த, ராமுவின் இரண்டாவது மனைவி எழிலரசி என்று முன்னாள் அமைச்சர் வி.எம்.சி.சிவக்குமார் புகார் அளித்துள்ளார்.
 
இதுகுறித்து திருபட்டினம் காவல் நிலையத்தில், வி.எம்.சி. சிவக்குமார் புகார் அளித்துள்ளார். இதன் பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓரினச் சேர்க்கையே டைனோசர்களின் அழிவுக்கு காரணம்: பிரபல விஞ்ஞானி தகவல்