Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலில் சீட் தராத அதிமுக; சுயேட்சையாக களமிறங்கும் தோப்பு வெங்கடாசலம்!

Webdunia
வியாழன், 18 மார்ச் 2021 (08:55 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் சீட் கிடைக்காத நிலையில் சுயேட்சையாக போட்டியிடுகிறார் தோப்பு வெங்கடாசலம்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது அதிமுக. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் போட்டியிட முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விருப்ப மனு அளித்திருந்த நிலையில் அந்த தொகுதியில் ஜெயக்குமார் என்பவர் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்.

இதனால் மன கலக்கம் அடைந்த தோப்பு வெங்கடாசலம் பெருந்துறை மக்களிடம் பேசும்போது கண்ணீர் வடித்த வீடியோவும் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் அதிமுக வாய்ப்பு தராத நிலையில் சுயேட்சையாக பெருந்துறை தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் தோப்பு வெங்கடாசலம். இன்று இதற்கான வேட்புமனுவை அவர் தாக்கல் செய்ய உள்ள நிலையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments