Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனுஸ்மிருதி வேணுமா? நாங்களே தறோம்! – திருமாவளவன் அறிவிப்பு!

Webdunia
புதன், 2 நவம்பர் 2022 (09:03 IST)
இந்துத்துவ சனாதானத்தை அம்பலப்படுத்தும் விதமாக 1 லட்சம் மனுஸ்மிருதி புத்தகங்களை வழங்க உள்ளதாக வி.சி.க. தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் தொடர்ந்து பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகளை விமர்சனம் செய்து வருகிறார். கடந்த சில மாதங்கள் முன்னதாக மனுஸ்மிருதி குறித்து திருமாவளவன் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.

ALSO READ: குடிக்க தண்ணீர் கிடைப்பதே போராட்டமாக மாறும் ஆபத்து? – குடியரசு தலைவர் எச்சரிக்கை!

இந்நிலையில் சமீபத்தில் கடலூரில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “தமிழக ஆளுனர் தனது பதவியை மறந்து திமுகவுக்கு எதிராக பேசுவதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தொண்டர் போல செயல்படுகிறார். கோவை கார் வெடித்த விபத்தில் பாஜக அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் செயல்படுகிறது.

தமிழ்நாட்டில் பாஜக வால் ஆட்டினால் ஒட்ட நறுக்குவோம். மற்ற கட்சிகள் இதை செய்யாவிட்டாலும் விசிக கண்டிப்பாக செய்யும். இந்து சனாதானத்தை தூக்கிப்பிடிக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸை அம்பலப்படுத்தும் விதமாக நவம்பர் 6ம் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் மனுஸ்மிருதி புத்தகங்களை இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பி.எஸ்.என்.எல் பயனாளிகளுக்கு 4ஜி எப்போது? அதிரடி அறிவிப்பு..!

பிரிட்டன் பொதுத்தேர்தல் தோல்விக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன்: ரிஷி சுனக்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் மறுப்பு: எதிர்ப்பு தெரிவித்து 150 வழக்கறிஞர்கள் கடிதம்!

உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைப்பதா.? அரசாணைக்கு அண்ணாமலை எதிர்ப்பு..!!

கோவில் உண்டியல் பணம் திருடப்படுவதற்கு திமுக அரசு தான் காரணம்: இந்து முன்னணி

அடுத்த கட்டுரையில்
Show comments