Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'இவன் மன்னிக்கப்படக் கூடாது' - ஒய்.ஜி.மகேந்திரன் முகநூல் பதிவு குறித்து ருத்ரன்

'இவன் மன்னிக்கப்படக் கூடாது' - ஒய்.ஜி.மகேந்திரன் முகநூல் பதிவு குறித்து ருத்ரன்
, புதன், 29 ஜூன் 2016 (17:41 IST)
இது வெறும் மடமையின் பிதற்றலாகப் படவில்லை. கயமையின் வெளிப்பாடு. இவன் மன்னிக்கப்படக்கூடாது என்று தனது முகநூல் பதிவில் மனநல மருத்துவர் ருத்ரன் தெரிவித்துள்ளார்.
 

 
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், சுவாதி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தனது முகநூல் பக்கத்தில் கருத்து ஒன்றினை பதிவிட்டு இருந்தார்.
 
ஆனால், தான் அதனை பதிவிடவில்லை. வேறு ஒருவரின் பதிவினை பகிர்ந்திருந்தாகவும், அதே சமயம் இந்த கருத்தில் தனக்கு உடன்பாடு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் எழுந்து வருகிறது. 
 
ஒய்.ஜி.மகேந்திரன் தனது பதிவில், ”ஸ்வாதி என்ற பிராமணப் பெண் கொடூரமாக பிலால் மாலிக் என்ற மிருகத்தால் வெட்டி கொல்லப்பட்டுள்ளார். தமிழகத்தில் மயான அமைதி நிலவுகிறது. யாருமே கண்டனம் தெரிவிக்கவில்லை.
 
இதே ஸ்வாதி தலித்தாக இருந்திருந்தால், ராகுல் ஓடி வந்திருப்பான். ஊடகங்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து ஒப்பாரி வைத்திருக்கும். தலித் இயக்கங்கள் மறியல் போராட்டம் என பொங்கியிருப்பார்கள்.
 
திராவிட அரசியல் பொறுக்கிகள் தாண்டவம் ஆடியிருப்பார்கள். காமரேட்டு கயவர்கள், மாதர் சங்கங்கள் ஓலமிட்டிருப்பார்கள்.
 
என்ன செய்வது இறந்தது பிராமண பெண் இதை வைத்து அரசியல் செய்தால் எந்த லாபமும் இருக்காது செத்தவனிலும் ஜாதி பார்க்கும் இந்த அவலம் எப்போது மாறும்? இறைவா இந்த தமிழகத்தை எப்படி தான் மாற்றப் போகிறாயோ???” என்று என்று தெரிவித்து இருந்தார்.
 
இந்நிலையில், ஒய்.ஜி.மகேந்திரனின் பதிவிற்கு, தமிழகத்தின் புகழ்பெற்ற மருத்துவரான ருத்ரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
அவர் தனது பதிவில், “இது வெறும் மடமையின் பிதற்றலாகப் படவில்லை. கயமையின் வெளிப்பாடு. இவன் மன்னிக்கப்படக்கூடாது” என்று குறிப்பிட்டு உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பசு மாட்டு கோமியத்தில் தங்கம்