Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்படியும் மீத்தேன் எடுக்கலாம்; விளைநிலங்களை குறிவைப்பது ஏன்?: நடிகர் ஜி.வி.பிரகாஷ் கேள்வி!

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2017 (16:04 IST)
இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் பொதுமக்கள், விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், சினிமா பிரபலங்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

 
நடிகர் கமல்ஹாசன் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் கருத்து வெளியிட்ட்டு வருகிறார். இதனை தொடர்ந்து தற்போது ஜி.வி.பிரகாஷும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகைய்ல் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறும்போது, நெல் விளையும் பூமியில்தான் மீத்தேன் எடுக்கமுடியுமா என்ன? ஆய்வுப்படி குப்பைக் கிடங்கு,  இரசாயன ஆலை கழிவு, சாணம், விவசாயக் கழிவு, உலுத்துப் போன மரங்கள், ஈசல் புற்று, எறும்பு புற்று இவற்றின் மூலம் 85  சதவீதம் மீத்தேன் எடுக்க முடியும். அதை விட்டு 12 விழுக்காடு மீத்தேன் தரும் விளைநிலங்களை குறிவைப்பது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கெனவே ஜல்லிக்கட்டுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்தவர் என்பது  குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைச்சர் ஐ பெரியசாமி வீட்டில் சோதனை எதிரொலி: தலைமை செயலகத்தில் பலத்த பாதுகாப்பு..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. புதினிடமும் பெருமை பேசிய டிரம்ப்..!

பிரசவ வலியால் துடித்த பெண்.. ஆட்டோவில் வைத்து பிரசவம் பார்த்த பெண் காவலர்.. குவியும் பாராட்டு!

கள்ளக்காதலனுடன் வாழ கணவரை கொலை செய்த மனைவி.. சாப்பாட்டில் கலந்த தூக்க மாத்திரை..!

தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments