ஸ்ரீ எல்லை மாரியம்மன் திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை- திரளான பெண்கள் பங்கேற்று வழிபாடு..

J.Durai
சனி, 25 மே 2024 (14:40 IST)
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதுப்பாளையம் சாலை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ எல்லை மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. 
 
இங்கு ஒவ்வொரு முக்கிய விசேஷ தினங்களிலும் ஸ்ரீ எல்லை மாரியம்மனுக்கு  பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள், பூஜைகள் நடைபெறுவது வழக்கம். 
 
மேலும்  எல்லை மாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டும், வைகாசி வெள்ளிக்கிழமை முன்னிட்டு ஸ்ரீ எல்லை மாரியம்மன் திருக்கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உலக நன்மை வேண்டியும், மேலும் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், கல்வி, செல்வம், கிடைத்திட திருவிளக்கு பூஜையில் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். 
 
தொடர்ந்து சுதர்சன நாமம் வழிபாடு, அம்மன் துதி பாடல்கள் போன்றவற்றை பாடி ஆராதனையில் ஈடுபட்டனர்.
 
அனைவருக்கும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்