Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீ எல்லை மாரியம்மன் திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை- திரளான பெண்கள் பங்கேற்று வழிபாடு..

J.Durai
சனி, 25 மே 2024 (14:40 IST)
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதுப்பாளையம் சாலை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ எல்லை மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. 
 
இங்கு ஒவ்வொரு முக்கிய விசேஷ தினங்களிலும் ஸ்ரீ எல்லை மாரியம்மனுக்கு  பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள், பூஜைகள் நடைபெறுவது வழக்கம். 
 
மேலும்  எல்லை மாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டும், வைகாசி வெள்ளிக்கிழமை முன்னிட்டு ஸ்ரீ எல்லை மாரியம்மன் திருக்கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உலக நன்மை வேண்டியும், மேலும் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், கல்வி, செல்வம், கிடைத்திட திருவிளக்கு பூஜையில் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். 
 
தொடர்ந்து சுதர்சன நாமம் வழிபாடு, அம்மன் துதி பாடல்கள் போன்றவற்றை பாடி ஆராதனையில் ஈடுபட்டனர்.
 
அனைவருக்கும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குரூப்-2 பணிகளுக்கு புதிதாக வயது வரம்பு திணிக்கப்பட்டது ஏன்.? தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி..!

பிரம்மாண்டமாக நடைப்பெற்ற காவேரி கூக்குரலின் உணவுக்காடு வளர்ப்பு & முக்கனி திருவிழா! - புதுக்கோட்டையில் MP அப்துல்லா துவங்கி வைத்தார்!

தேர்வில் தோல்வி.. தாயையும் தம்பியையும் கொலை செய்த கல்லூரி மாணவர்: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

12வது குழந்தைக்கு தந்தையானார் எலான் மஸ்க்.. குவியும்வாழ்த்துக்கள்..!

சென்னை அருகே மெத்தனால் கலந்த 1500 லிட்டர் ரசாயனம் பறிமுதல் - 4 பேர் கைது

அடுத்த கட்டுரையில்