Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”திருவண்ணாமலை பொறியாளருக்கு கொரனா வைரஸ் இல்லை”; அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

Arun Prasath
வெள்ளி, 31 ஜனவரி 2020 (16:19 IST)
சீனாவிலிருந்து திருவண்ணாமலை வந்த பொறியாளருக்கு கொரனா வைரஸ் அறிகுறி இருப்பதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு கொரனா வைரஸ் இல்லை, சாதாரண காய்ச்சல் தான் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரனா வைரஸால் சீனாவில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இலங்கை. பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, கனடா, தென் கொரியா ஆகிய நாடுகளிலும் கொரனா வைரஸ் பரவி வருகிறது.

இதே போல் நேற்று கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கொரனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் சீனாவில் இருந்த வந்த திருவண்ணாமலைச் சேர்ந்த பொறியாளர் ஒருவருக்கு கொரனா வைரஸ் அறிகுறி இருப்பதாக வெளிவந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியரான விமல், சீனாவில் இருந்து வந்தவர் தான். ஆனால் அவருக்கு கொரனா பாதிப்பு இல்லை, அவருக்கு சாதாரண சளித் தொந்தரவு தான்” என கூறியுள்ளார்.

மேலும் அப்பேட்டியில், “கிருஷ்ணகிரியில் யாருக்கும் கொரனா வைரஸ் இல்லை, தமிழகத்தில் இதுவரை யாரும் கொரனா வைரஸால் பாதிப்படையவில்லை” எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments