Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டீ குடித்துக்கொண்டிருந்த திருமுருகன் காந்தி திடீர் கைது

Webdunia
வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (14:01 IST)
வைகோவை சிங்களர்கள் தாக்க முயன்றதை கண்டித்து நடைபெற்ற முற்றுகை போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க சென்ற திருமுருகன் காந்தி உள்பட மூன்று பேர் டீ குடித்துக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டனர்.


 

 
ஜெனிவாவில் நடந்து வரும் ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றி வரும் வைகோ மீது சிங்களர்கள் தாக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சிங்களர்களின் இந்த செயலை கண்டித்து நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றிகையிட்டு மதிமுகவினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
 
தமிழ்புலிகள் அமைப்பினரும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க திருமுருகன் காந்தி உள்பட மூன்று பேர் அங்கு சென்றுள்ளனர். அவர்களை நுங்கம்பாக்கம் காவல்துறை துணை ஆணையர் தடுத்து நிறுத்தியுள்ளார். தடையை மீறி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 
 
இதையடுத்து மருத்துவமனைக்கு புறப்பட்ட திருமுருகன் காந்தி உள்பட மூன்று பேரும் செல்லும் வழியில் டீ கடையில் டீ குடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது நுங்கம்பாக்கம் காவல்துறை துணை ஆணையர் தலைமையில் 10 காவல்துறையினர் அவர்களை மூன்று கைது செய்தனர். இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments