Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்போ மோடி அலை… இப்போ மோடிக்கு எதிரா அலை… – திருமா வளவன் கருத்து

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2019 (12:17 IST)
திமுக கூட்டணியில் ஒருவேளை பாமக இணையும் சூழல் உருவானால் அமமுக வுடன் கூட்டணி அமைக்கலாம் தினகரனுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளிவந்த செய்திகளை திருமா வளவன் மறுத்துள்ளார்.

பாமக தனது தேர்தல் கூட்டணிக்காக நேற்று அதிமுக அணியில் இணைந்தது. ஆனாலும் அதற்கு முன்னர் திமுகவுடனும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் சிலக் காரணங்களால் திமுக கூட்டணியில் பாமக இணையமுடியாமல் போனது. அதற்கு முக்கியக் காரணமாக திமுகக் கூட்டணியில் உள்ள விசிக தலைவர் திருமாவளவன் பாமக இருக்கும் கூட்டணியில் தங்களால் இருக்க முடியாது என அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால் அதையும் மீறி காங்கிரஸ் மற்றும் திமுக மாவட்ட செயலாளர்கள் சிலர் பாமக வோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால், திருமாவளவன் ரகசியமாக அமமுக துணைப்பொதுச் செயலாளர் தினகரனோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் அந்த செய்தியை திருமாவளவன் மறுத்தார். அதுகுறித்தும் அதிமுக கூட்டணி குறித்தும் ஊடகங்களிடம் அவர் பேசியது பின்வருமாறு…

பாமக அங்கம் வகிக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க முடியாது. கட்சியின் நலனை மனதில் வைத்து முடிவுகளை எடுக்குமாறு திமுக தலைமையிடம் நான் கூறினேன். அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்திருப்பது, திமுக கூட்டணிக்கே சாதகமாக அமையும் என திருமாவளவன் தெரிவித்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி அலை வீசியது..ஆனால் இப்போது மோடிக்கு எதிராக அலை வீசுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments