Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா பிறந்த நாளில் முஸ்லிம் கைதிகளை விடுவிக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்..!

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (10:18 IST)
அறிஞர் அண்ணா பிறந்த நாளில் 37 முஸ்லிம் கைதிகளை விடுவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார் 
 
சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் ’அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 14 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்த 700 சிறைவாசிகளை விடுதலை செய்ய சமீபத்தில் அரசு ஆணை பிறப்பித்தது. ஆளுநர் இந்த அரசாணையை ஏற்றுள்ளார். 
 
ஆனால் 20 முதல் 25 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து சிறையில் இருக்கும் 37 முஸ்லிம் சிறைவாசிகள் இன்னும் சிறையில் தான் உள்ளனர் வரும் செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு வழக்கம்போல் 14 ஆண்டுகள் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய ஏற்பாடு செய்து வரும் நிலையில் அதில் இந்த 37 முஸ்லிம் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைப்பதாக தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments