Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா பிறந்த நாளில் முஸ்லிம் கைதிகளை விடுவிக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்..!

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (10:18 IST)
அறிஞர் அண்ணா பிறந்த நாளில் 37 முஸ்லிம் கைதிகளை விடுவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார் 
 
சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் ’அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 14 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்த 700 சிறைவாசிகளை விடுதலை செய்ய சமீபத்தில் அரசு ஆணை பிறப்பித்தது. ஆளுநர் இந்த அரசாணையை ஏற்றுள்ளார். 
 
ஆனால் 20 முதல் 25 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து சிறையில் இருக்கும் 37 முஸ்லிம் சிறைவாசிகள் இன்னும் சிறையில் தான் உள்ளனர் வரும் செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு வழக்கம்போல் 14 ஆண்டுகள் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய ஏற்பாடு செய்து வரும் நிலையில் அதில் இந்த 37 முஸ்லிம் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைப்பதாக தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி.. கொடுத்த வாக்குறுதிகள்..!

மூன்றாவது முறை பிரதமரானதும் முதலில் ரஷ்யா செல்லும் மோதி - புதினுடன் என்ன பேசவுள்ளார்?

சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் ரவுடியிசம்? பட்டபகலில் யூட்யூபரை மிரட்டும் போதை ஆசாமிகள்! – வைரலாகும் வீடியோ!

இன்று இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் கனமழை.. சென்னையில் மழை பெய்யுமா?

முதல்வரின் புதுக்கோட்டை பயணம் திடீர் ரத்து.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments