Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குளம், குட்டையில்தான் தாமரை மலரும் – கலாய்த்த திருமாவளவன்

Webdunia
வெள்ளி, 24 மே 2019 (15:41 IST)
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி கட்சிகள் ஒரு தொகுதி தவிர அனைத்திலும் வெற்றி பெற்று புதிய சாதனையை படைத்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழத்துக்களை தெரிவித்தார் விசிக தலைவர் திருமாவளவன். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “மக்கள் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு அளித்த ஆதரவிற்கும், நம்பிக்கைக்கு நன்றி. சாதி மத வெறியர்களுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை மக்கள் நிரூபித்து விட்டார்கள். தேசிய அளவில் எது நடக்கக்கூடாது என்று நினைத்தோமோ அது நடந்துவிட்டது. இந்துக்களின் எதிரியாக ராகுலை சித்தரித்துவிட்டார்கள். தமிழ்நாட்டில் அமைந்தது போல் இல்லாமல் பிற மாநிலங்களில் எதிர்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாததால் வாக்குகளும் சிதறிவிட்டன. தாமரை வேண்டுமானால் குளம் குட்டைகளில் மலரலாம். ஆனால் தமிழ்நாட்டில் மலராது” என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments