Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.எஸ்.எஸ்ஸே அவங்க ஆளுன்னு சொல்ற அளவுக்கு இருக்கார்! – சீமான் குறித்து திருமாவளவன்!

Webdunia
ஞாயிறு, 17 அக்டோபர் 2021 (14:58 IST)
சமீபத்தில் மதங்கள் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் பேசிய வீடியோ வைரலான நிலையில் அதுகுறித்து திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி ட்ரெண்டாகி வருகிறது. அதில் தமிழனின் ஆதி மதம் கிறிஸ்தவமோ, இஸ்லாமோ அல்ல. அவை வேறு தேச மதங்கள். தமிழனின் ஆதி மதம் சைவம் என்ற ரீதியில் பேசியிருந்தார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக நிலையில் பலரும் மதப்பாகுபாட்டோடு சீமான் பேசுவதாக கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் “சீமான் தங்களுக்கானவர் என ஆர்எஸ்எஸ் காரர்கள் சொல்லும் அளவிற்கு சனாதான சக்திகளுக்கு துணை போகும் அரசியலை சீமான் நடத்தி வருகிறார். சமூக நீதி அரசியல் பேசும் மண்ணில் சனாதான சக்திகளுக்கு துணை போக வேண்டாம்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments