Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்து திமுக தான்: தொல்.திருமா அரசியல் ஆருடம்!!

Webdunia
ஞாயிறு, 23 ஏப்ரல் 2017 (10:48 IST)
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி வரும் 25-ஆம் தேதி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. 


 
 
அதற்கான முழு அடைப்பு போராட்டம் விளக்கக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன், திராவிடர் கழகம் கி.வீரமணி, மார்க்சிஸ்ட்  சவுந்தரராஜன் கலந்து கொண்டனர். 
 
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூட்டத்தில் கூறியதாவது, அதிமுக ஆட்சி என்பது மோடியின் கையில் உள்ள கண்ணாடி பாத்திரம். திராவிட கட்சிகளை வேரறுக்க வேண்டும், மதவாதச் சக்திகள் ஆட்சி அமைக்க வேண்டும் என்று பாஜக கங்கணம் கட்டிக் கொண்டு போராடி வருகிறது. 
 
பிரதமர் மோடியால் 7 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழகத்தின் விவசாய பிரதிநிதியை சந்திக்காதது ஏன். அடுத்து மத்திய் அரசு திமுகவுக்கு குறி வைத்து வருகிறது. ஜெயலலிதா மரணத்தால் அதிமுக பலவீனமாக உள்ளது. திமுகவையும் வீழ்த்திவிட்டால் தமிழகத்தில் காலூன்றலாம் என்பது பாஜக திட்டம் என  திருமாவளவன் பேசினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

தமிழக பாஜக தலைவர் பதவி.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கட்சியின் தேர்தல் அதிகாரி..!

பாட்டிலில் பெட்ரோல் தர மறுப்பு.. பங்க் மேனேஜரை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments