Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்..!- திருக்குறளை மோதிரமாக்கிய திருமண ஜோடி!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்..!- திருக்குறளை மோதிரமாக்கிய திருமண ஜோடி!
, செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (15:01 IST)
திருவள்ளுவர் குறித்த பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து வரும் நிலையில் திருமண ஜோடிகள் திருக்குறளை மோதிரத்தில் அச்சிட்டுள்ளது ட்ரெண்டாகியுள்ளது.

தமிழகத்தில் சமீப காலமாக திருவள்ளுவரின் அடையாளம் குறித்த பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் நாள்தோறும் நடந்து வருகின்றன. இந்நிலையில் திருவள்ளுவர் அடையாளத்தை விட அவர் சொன்ன திருக்குறள் முக்கியம் என்ற வகையில் அமைந்துள்ளது ஒரு சம்பவம்.

சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட திருமண ஜோடிகள் தங்கள் மோதிரத்தில் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற குறளை அச்சிட்டு அணிந்து கொண்டுள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சவுதி பெண்கள் இராணுவத்தில் சேரலாம் - தூள் கிளப்பும் இளவரசர்!