Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ. 36 லட்சம் செலவில் திருக்குறளை கொரிய மொழியில் மொழிபெயர்பு : ஜெயலலிதா

ரூ. 36 லட்சம் செலவில் திருக்குறளை கொரிய மொழியில் மொழிபெயர்பு : ஜெயலலிதா
, செவ்வாய், 29 செப்டம்பர் 2015 (17:19 IST)
ரூ.36 லட்சம் செலவில் திருக்குறளை கொரிய மொழியில் மொழிபெயர்பு செய்யப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


 

 
முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் உரையாற்றிய போது, 110வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் “ திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் பாடல்கள், சீனம் மற்றும் அரபு மொழிகளில் மொழி பெயர்க்க என்னால் ஆணையிடப்பட்டு மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன. தமிழ் மொழிக்கும், கொரிய மொழிக்கும் இடையே உள்ள தொடர்பின் அடிப்படையி லும், திருக்குறளை கொரிய மொழியில் மொழி பெயர்க்க வேண்டும் என்ற கொரிய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படை யிலும், கொரியாவில் தமிழர்களும், தமிழகத்தில் கொரியர்களும், வாழ்ந்து வருவதைக் கருதியும் பார்போற்றும் உலகப் பொதுமறையாம் திருக்குறளை கொரிய மொழியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். 
 
இதற்கென, முப்பத்தாறு லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  மேலும், ஓரடியில் உலக மக்களுக் கேற்ற எளிய அற நெறிக் கருத்துக்களைக் கொண்ட தமிழ் மொழியின் அற நெறிக் கருவூலமான ஆத்திசூடியை சீனம் மற்றும் அரபு மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கென, பதினைந்து லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  
 
இந்த அறிவிப்புகள், தமிழ் மொழியை வளர்க்கவும், தமிழுக்கு தொண்டாற்றுபவர்களை ஊக்குவிக்கவும் வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil