Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை வெள்ளத்தில் பலியான 35 உடல்கள் மீட்பு : சென்னையில் பரிதாபம்

Webdunia
வெள்ளி, 4 டிசம்பர் 2015 (13:59 IST)
சென்னையை புரட்டிப்போட்ட மழையில் இதுவரை அடையாளம் தெரியாத 35 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 
 
இரண்டு நாட்களுக்கு முன் தமிழகத்தில் பெய்த கன மழையால் சென்னை பெரிதும் பாதிக்கப்பட்டது. சென்னையை சுற்றியுள்ள ஏரிகளில் நீர் நிரம்பியதால், உபரி நீர் வெளியேற்றப்பட்டது, அதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
 
ஏரிகளுக்கு அருகில் இருந்த குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. தாம்பரம், முடிச்சூர், வேளச்சேரி போன்ற பகுதிகளில், மக்கள் வசிக்கும் வீடுகளில் சில அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதிலிருந்து பலர் தப்பித்து, வீட்டின் மொட்டை மாடிகளில்  தஞ்சம் அடைந்துள்ளனர்.
 
பலர் சாலைகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.  அரசாங்கமும், சில தனியார் நிறுவனங்களும் அவர்களுக்கு முடிந்த அளவில் உதவிகள் செய்து வருகிறது. பல இடங்களில் தங்களுக்கு உதவ எவரும் வரவில்லை என்று ஏராளமான மக்கள் பசித்த வயிரோடு காத்து கிடக்கின்றனர்.
 
கடந்த மூன்று நாட்களில், மூன்றரை லட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 7 லட்சம் பேர் வீடுகளை காலி செய்துவிட்டு வெளியேறி விட்டதாகவும் தெரிகிறது. அவர்கள் அனைவரும் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
இதுவரை சென்னையில், மூழ்கிய வீடுகளுக்குள்ளும், வெள்ளத்தில் சிக்கியும் இதுவரை 70 பேருக்கும் மேல் உயிரிழந்ததாக தகவல் வெளியனது.
 
தற்போது, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த, மேலும் 35 பேர்களின் உடல்கள் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டன. மழைநீர் முழுவதும் வடிந்த பிறகே, அவர்களை பற்றிய விவரங்கள் தெரியவரும்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments