Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கரூரில் சிக்கிய பெண்கள் வாக்குமூலம் : 13 மாவோயிஸ்ட்டுகள் தமிழகத்தில் ஊடுருவல்

கரூரில் சிக்கிய பெண்கள் வாக்குமூலம் : 13 மாவோயிஸ்ட்டுகள் தமிழகத்தில் ஊடுருவல்
, புதன், 3 ஆகஸ்ட் 2016 (15:55 IST)
தமிழகத்தின் பல பகுதிகளிலும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கூலி வேலை செய்வதுபோல ரகசியமாக செயல்பட்டுக் கொண்டிருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, கடந்த ஜூலை 21ம் தேதி சென்னை படப்பை அருகே ரீனா ஜாய்ஸ்மேரி என்பவர் தனியார் ஜவுளி நிறுவனத்தில் வேலைக்கு சென்று வந்தபோது கைது செய்யப்பட்டார். 


 

 
அதே நாளில் கரூர் வெங்கமேடு கணக்குப்பிள்ளைபுதூரில் உள்ள ஒரு வீட்டில் வாடகை வீட்டில் தங்கியிருந்து தனியார் ஜவுளி நிறுவனத்தில் வேலை செய்து வந்த கலா(52), சந்திரா(45) ஆகியோரையும் திருச்சி மற்றும் கோவை கியூபிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்
 
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இன்னும் 13 மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக விசாரனையில் தெரிய வந்துள்ளது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதுவிற்கு அடிமையான இளம்பெண்: போதையில் நடுரோட்டில் புரண்டதால் பரபரப்பு