Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேமுதிக பிரசாரத்தின்போது வேண்டுமென்றே மின்வெட்டு - பிரேமலதா குற்றச்சாட்டு

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2016 (18:14 IST)
தேமுதிக பிரசாரம் நடைபெறும் இடத்தில் வேண்டுமென்றே மின்வெட்டு செய்கின்றனர். இது அநாகரீகமான செயல் என்று தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
 

 
கோவையில் வேட்பாளர்களை ஆதரித்து திறந்த வேனில் பிரச்சாரம் செய்த பிரேமலதா விஜயகாந்த், ’’கடந்த 5 ஆண்டுகளில் அதிக டாஸ்மாக் கடைகளை திறந்தது தான் ஜெயலலிதாவின் சாதனை. மீண்டும் எனக்கு வாய்ப்பு வழங்கினால் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவேன் என ஜெயலலிதா கூறி வருகிறார்.
 
அதுபோன்று, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மது விலக்கை அமல்படுத்துவோம் என கருணாநிதி தெரிவித்துள்ளார்.
 
கருணாநிதி குடும்பமும், திமுகவினரும், ஜெயலலிதா, சசிகலாவும் தான் மதுபான ஆலைகளை நடத்தி வருகிறார்கள். இந்த 2 பேரும் இன்னும் 100 ஆண்டுகள் ஆட்சி செய்தாலும் தமிழகத்தில் நிச்சயமாக பூரண மதுவிலக்கை அமல்படுத்தமாட்டார்கள்.
 
எங்கள் கூட்டணியில் உள்ள 6 கட்சி தலைவர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு இல்லை. பலர் இந்த கூட்டணியை உடைக்க பார்த்தார்கள். இந்த தேர்தலில் இளைஞர்கள், மாணவர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
 
தேமுதிக பிரசாரம் நடைபெறும் இடத்தில் வேண்டுமென்றே மின்வெட்டு செய்கின்றனர். இது அநாகரீகமான செயல்.
 
தேமுதிகவை மக்கள் ஆதரித்து ஆட்சியமைந்தால், வீடு தோறும் ரேஷன் பொருட்கள் வந்துசேரும். நதிகள் இணைக்கப்படும். அரசுத்துறைகளில் ஊழல் இல்லாமலும், லஞ்சம் இல்லாமலும் செய்வோம்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்...
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியர்களை அறையில் பூட்டி சிறை வைத்த மாணவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. மாத வாடகை ரூ.3 கோடி..!

காவலர்களுக்கு ஊதிய உயர்வு: காவல் ஆணையத்தின் பரிந்துரையை உடனே செயல்படுத்த வேண்டும்! அன்புமணி கோரிக்கை

தற்காலிக பணியாளர்களை நீக்குங்கள்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

அம்மா, அப்பா முதல் காதலி வரை.. தேடித்தேடி சுத்தியலால் அடித்துக் கொன்ற இளைஞர்! - கேரளாவை உலுக்கிய சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments