Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறையில் சொகுசு வாழ்க்கை நடத்த சசிகலா கொடுத்த பட்டியல் தெரியுமா!

சிறையில் சொகுசு வாழ்க்கை நடத்த சசிகலா கொடுத்த பட்டியல் தெரியுமா!

Webdunia
புதன், 15 பிப்ரவரி 2017 (15:14 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சசிகலா பெங்களூர் சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இதற்காக பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய சென்றுள்ளார் சசிகலா. இவரது தரப்பில் சிறையில் தேவைப்படும் வசதிகள் குறித்த பட்டியல் ஒன்று சிறை நிர்வாகத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது.


 
 
நேற்று தீர்ப்பு வந்ததும் உடனடியாக பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என கூறப்பட்டது. ஆனால் சசிகலா தரப்பில் தனக்கு காய்ச்சல் இருப்பதால் 4 வார காலம் அவகாசம் கேட்டனர். ஆனால் அதனை மறுத்த உச்ச நீதிமன்றம் உடனடியாக சரணடையவில்லை என்றால் கைது செய்யப்படுவார்கள் என கூறியது.
 
இதனையடுத்து சசிகலா உள்ளிட்ட மூவரும் நீதிமன்றத்தில் சரணடைய புறப்பட்டனர். நீதிமன்றத்தில் சரணடைந்த பின்னர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.
 
இந்நிலையில் சிறையில் தனக்கு சில வசதிகள் தேவை என சசிகலா தரப்பில் சிறை நிர்வாகத்திடம் ஒரு பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் மினரல் வாட்டர், தனி ஏ.சி.அறை, வீட்டில் செய்யப்பட்ட உணவுகள், நடப்பதற்கு போதுமான இடம் போன்ற பல வசதிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
 
ஆனால் சிறையில் பொதுவாக வருமான வரி சரியாக கட்டுபவர்களுக்கு மட்டுமே சிறையில் மின்விசிறி மற்றும் செய்தித்தாள் போன்ற வசதிகள் செய்து தரப்படும்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போபால் பாலத்திற்கு டஃப் கொடுக்கும் ஆந்திரா மேம்பாலம்.. எந்த ஊரு எஞ்சினியர் கட்டியது?

தேனிலவு கொலையில் கள்ளக்காதல் மட்டும் காரணம் அல்ல.. போலீசார் அதிர்ச்சி தகவல்..!

ஒரு கிலோ மாம்பழம் 8 ரூபாய் மட்டுமே.. மாமரங்களை வெட்டி சாய்க்கும் விவசாயிகள்..!

திமுக கூட்டணியில் பாமக வந்தால் நாங்கள் வெளியேறுவோம்: திருமாவளவன் உறுதி..!

இந்தி இனி தேவையில்லை.. தமிழ்நாடு பாணியில் மகாராஷ்டிரா அரசு.. சூப்பர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments