Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம்குமார் சாவிலும், ஜெயலலிதா சாவிலும் மர்மம்; கேட்க நாதியில்லை: டி.ராஜேந்தர்

Webdunia
ஞாயிறு, 29 ஜனவரி 2017 (17:49 IST)
ராம்குமார் சாவில் மர்மம் உள்ளது என்று சொன்னாலும் கேட்பதற்கு நாதியில்லை, முன்னால் முதல்வர் ஜெயலலிதா சாவில் மர்மம் இருப்பது என்று சொன்னாலும் அதை கேட்பற்கு நாதியில்லை என்று லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.


 

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய டி.ராஜேந்தர், ”சென்னை மெரினா போராட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்தியது யார்? இது குறித்து சிபிஐ விசாரணை வேண்டும். முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு சிலர் கெட்டபெயர் ஏற்படுத்த நினைக்கின்றனர்.

சென்னையில் நடந்த அறப்போராட்டத்தில் அரங்கேறிய திரைக்கதையை மாற்றியது யார்? திரைக்கு பின்னால் நின்று சூழ்ச்சி செய்தது யார்? சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய காவல் துறையே கட்டவிழ்க்கும் வன்முறை காட்சிகளை எங்கிருந்து கொண்டு வந்தார்கள்?

போராட்டத்திற்குள் புகுந்து தீயை கொளுத்திய அந்த தீய சக்திகள் யார் என்பது கண்டுபிடிக்க வேண்டும். ஏன் என்றால் நமது நாட்டில் சாதாரன ஒரு ஏழை குடும்பத்து மாணவன் ராம்குமார் சாவில் மர்மம் உள்ளது என்று சொன்னாலும் கேட்பதற்கு நாதியில்லை, முன்னால் முதல்வர் ஜெயலலிதா சாவில் மர்மம் இருப்பது என்று சொன்னாலும் அதை கேட்பற்கு நாதியில்லை” என்று கூறியுள்ளார்.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments